Pages

Friday, 12 April 2019

நிகரில்லாதவள்


ஒவ்வொரு ஆணும் விழையும் பெண்கள் இருவர்
தன்னை ஆணென உணரவைக்கும் ஒருத்தி
தன்னை மகவென  ஏந்திக்கொள்ளும் பிறிதொருத்தி
இவையிரண்டும் ஒருங்கே கொண்டவள் நீ
உன் மனதமர்ந்தவன் முழு உலகையும் வென்றவனாவான்
பின் இங்கு அவன் கொள்ள பிறிதொன்றில்லை - ஆம்
நான் வென்று தருக்க நினைத்த களத்தில் வென்றுவிட்டேன்
இனி இப்புவியில் நான் வெல்லவோ அடையவோ வேறேதுமில்லை

- குமரன் (12/04/2019)

No comments:

Post a Comment