Pages

Monday, 11 September 2023

கவிதை நீ கவிஞன் நான்

சொல்லில் தெய்வம் எழும்
கணம் உண்டென்றனர் அறவோர்
சொல்லெலாம் பொருளிழக்கும்
கணம் உண்டென்றனர் அறிவோர்

அவ்விரண்டின்  மெய்மை உணர்ந்தது
உனைக் கண்டு மட்டுமே

என் சொல்லின் உருவம் நீ!
என் சொல்லின் மௌனமும் நீ!

 - குமரன்

No comments:

Post a Comment